முதல் பக்கம்

Sep 16, 2011

ஐந்து துளிர் இல்லங்கள் துவக்கம்

  செப்டம்பர்,14 அன்று மாலை சுருளிப்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் துளிர் இல்லங்களின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 88 பேர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்செயலாளர் தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன், கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.நியூட்டன் துளிர் இல்லம்,எடிசன் துளிர் இல்லம், ஐசக் அஸிமோ துளிர் இல்லம், கலிலியோ துளிர் இல்லம், எட்வர்டு ஜென்னர் துளிர் இல்லம் ஆகிய ஐந்து துளிர் இல்லங்கள் துவங்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் துளிர் இல்ல உறுப்பினர் படிவத்தை நிரப்பிக் கொடுத்தனர். துளிர் இல்லத்திற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டு விடைபெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைப் பொருளாளர் ஓவியாதனசேகரன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment