முதல் பக்கம்

Sep 19, 2011

குழந்தை விஞ்ஞானியர் விருது: 19-வது தேசிய குழந்தைகள் மாநாடு ஆய்வு தலைப்புகள் அறிவிப்பு



கம்பம்,செப்.4-

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வருகிற டிசம்பர் மாதம்27-ந் தேதி முதல் 31 -ந் தேதி வரை நடைபெறும் தேசிய குழந்தைகள் மாநாட்டில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகளுக்கு ஆய்வு தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் குழந்தைகளுக்கு குழந்தை விஞ்ஞானியர் விருது வழங்கப்படுகிறது.

குழந்தைகள் தேசிய மாநாடு

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை, தேசிய தகவல்மற்றும் அறிவியல் தொழில் நுட்ப பரிமாற்ற குழு ஆகிய மத்திய அரசு நிறுவனங்கள்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஆண்டு தோறும் தேசிய குழந்தைகள் மாநாடு நடத்துகின்றன.

ராஜஸ்தான் மாநிலதலைநகர் ஜெய்ப்பூரில் வருகிறடிசம்பர் மாதம் 27 -ந்தேதி முதல் 31 -ந் தேதிமுடிய 19-வது ஆண்டாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுகிறது.மாநாட்டின் கருப்பொருளாக நிலவளத்தை வளத்திற்காக பயன் படுத்துவோம், வருங் காலத் திற்காகவும் பாதுகாப் போம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

துணைத்தலைப்புகளாக நிலத்தை அறிவோம், நிலத் தின் செயல்பாடுகள், நிலத்தின் தரம், நிலத்தில் மனிதனால் மேற்கொள்ளப்படும் செயல் பாடுகள், நிலவளத்தின் நிலத்தகு பயன்பாடு, நிலத்தை பயன்படுத்துவது பற்றிய சமூக அறிவு ஆகியவைகள் அறிவிக் கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு

மாநாட்டில் கலந்து கொள்ள 10 வயது முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகள் இளை யோர் குழு என்றும், 14வயது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள் மூத்தோர் குழு என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாணவ-மாணவிகள் மற்றும் முறை சாரா கல்வி படிக்கும் இரவு பள்ளி, குழந்தை தொழிலாளர் களுக்கான இரவு பள்ளி, துளிர் இல்ல குழந்தைகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள லாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பயிற்சி முகாம்

மாநாட்டில் கலந்து கொள் ளும் மாணவ-மாண விகளுக்கு, ஆய்வு செய்யவும் வழிகாட்ட வும் நெறியாளர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில்வழிகாட்டும் நெறியாளர்களுக்கான பயிற்சி முகாம் தேனி யில் நடைபெற உள்ளது. பயிற்சி முகாமில் மாநில மாவட்ட கருத்தாளர் கள், பேராசிரியர் கள் கலந்து கொண்டு பேசு கிறார்கள். பயிற்சி முகாமில் ஆய்விற்கான பதிவுபடிவம், கையேடுகள் போன்றவைகள் வழங்கப் படுகிறது.

ஆய்வுகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் சமர்ப்பிக்க லாம். மாவட்ட அளவில் அக்டோபர் மாதம் பெரிய குளத்திலும், மாநில அளவில் நவம்பர் மாதம் விருதுநகரிலும் மாநாடு, நடைபெறுகிறது. தேசிய அளவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சிறந்த ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கும் குழந்தைகளுக்கு குழந்தை விஞ்ஞானியர் விருதினை குடி யரசு தலைவர் வழங்குகிறார்.

மாநாட்டில் பங்கேற்கவும், விதி முறைகள் பற்றியும் தெரிந்து கொள்ள தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக் கம், குட்டியா பிள்ளை தெரு, கம்பம், என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment