முதல் பக்கம்

Sep 9, 2011

செப்டம்பர் 8,சர்வதேச எழுத்தறிவு தினம்


* * நண்பர்களே, வணக்க்ம். இன்று சர்வதேச எழுத்தறிவு தினம். சர்வதேச ஐக்கிய நாடுகளின் கல்வி,அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) )1965ம் ஆண்டு, நவம்பர் 17 ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ம் நாள், சர்வதேச எழுத்தறிவு தினமாக கொண்டாட வேண்டும் என அறிவித்தது. 1966ல் முதல் சர்வதேச எழுத்தறிவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் குறிக்கோள் என்ன தெரியுமா? ஒவ்வொரு தனி மனிதர், குழுக்கள் & சமூகத்திடம் எழுத்தறிவின் முக்கியத்தை வலியுறுத்தி அதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் யுனெஸ்கொ அமைப்பு சர்வதேச சமூகத்தின் எழுத்தறிவு மற்றும் முதியார் கற்றலின் அவசியத்தின் உணர்த்துவதே..இதன் குறிக்கோள்

* * "*எழுத படிக்க மட்டும் கற்றுக்கொடுப்பது கல்வியல்ல. வெறும் தகவல் தொகுப்பாக மக்களை மாற்றுவது கல்வியின் பணியல்ல. மாறாக ஒட்டு மொத்த சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் விருப்பு, வெறுப்பன்றி, விசாரணை செய்வதும், அநீதியைக் களைவதும், முறையற்ற பகிர்வுப் பரவலை அனைவருக்குமானதாக மாற்றுவதும்தான் கல்வியின் நோக்கம்**" -----**பாவ்லொ பிரையர்.*

இன்றைய கல்வி முறை என்பது அதிகார வர்க்கத்தின் கல்வியாகவே உள்ளது. இதில் கலைத்திட்டம்,பாட திட்டம், பாட நூல்கள் அனைத்தும் சமூகத்தின் ஆதிக்க சக்தியினரே திட்டமிடுகின்றனர். அதில் அவர்கள் தமக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை உணர்வுடன் திட்டமிட்டு வடிவமைக்கப் பட்டவை. ஆசிரியர் தகவல்களை அறிவைத் தருதல் என்ற பெயரில் மாணவர்களிடம் திணித்தலே, இன்று கல்வியாக கருதப்படுகிறது. அதுதால் நடந்து கொண்டும் இருக்கிறது.இக்காலக் கல்விமுறை எடுத்துக்கூறுதல் என்ற நோயால அவதிப்படுகிறது. இங்கு கல்வி என்பது சேமிப்பு முறை.இதில் ஆசிரியர்கள் சேமிப்பாளர்கள். மாணவர்கள் சேமிப்பு பெட்டிகள்.ஆசிரியர்கள் வகுப்பறையில் அதிகார தொனியில் கொட்டுவதை அப்படியே மனப்பாடம் செய்து, தேர்வின் போது வாந்தி எடுப்பது/மறு உற்பத்தி செய்வதே இன்றைய கல்வியின் நடைமுறை.
இக்காலகல்வி,ஆளும்வர்க்கத்திற்கு சேவகம்செய்யும் பணியாளனாக/கருவியாக மாறிவிடுகின்றது.இன்றைய வகுப்பறைகளில் உரையாடல் நடக்கவில்லை. மாணவர்கள்/குழந்தைகள் எதுவும் பேசாமல் வகுப்பறையிலிருந்து ஆசிரியர் பேசி அம்பாரமாய் குவித்த வார்த்தைகளை
மட்டும் பிள்ளைகள் தங்கள் பைகளில் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு போகிறார்கள். வகுப்பறையில் கல்வி அமைப்பில் உறைந்து கிடக்கிறது பயமுறுத்தும் மௌனம். 
ஆனால் *இது
உடைபட வேண்டிய மௌனம்*.குழந்தைகளின் குரல்களை விடுவிக்கப்படவேண்டியது இன்றைய வகுப்பறை, ஆசிரியர்கள்,கல்வியாளர்கள் மற்றும் சமூகத்தின் கடமையாகும்.நம் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் நிறைய பேரை பெயிலாக்க வேண்டும் என்பதற்காகவே நடக்கிறது. நீங்கள் உற்று நோக்கினால், முதல் வகுப்பில் 6 பிரிவு இருக்கும். ஆனால் 12 ம் வகுப்பில் 1 பிரிவு மட்டுமே இருக்கும்.இந்தியாவில் உள்ள 90% கல்விக்கூடங்களின் நிலை இதுதான். ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். முதல் வகுப்பில் சேர்ந்த பிள்ளைகள் எங்கே ஓடிவிட்டனர். 
அவர்களைத் துரத்தியது யார்?
ஆசிரியர், கல்வி முறை, அதிகாரவர்க்கம் மற்றும் சமூக அமைப்புகளே..!எப்படி..
பெயிலாகி விட்டார்கள். அவர்களுக்கு படிப்பு வரவில்லை எனறு முத்திரை
குத்திவிடுகிறோம். படிப்பு வராது என்ற விஷயம் எங்கேயாவது இருக்கிறதா?
அறிவியல்ரீதியாக அப்படி எதுவும் இல்லை; நிரூபணம் செய்யப்படவும் இல்லை.அறிவியல் இயக்கம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிந்த/அறிந்த தகவல், ஆசிரியர்களின் அணுகுமுறை,புரியாத பாட திட்டம் போன்றவையே இதன் முதன்மைக் காரணிகள்.பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சுவையான முறையில் போதிப்பும் பாடதிட்டமும் தற்போதைய கல்வி முறை தரவில்லை என்பது தான் உண்மை.ஒரு வாய் பல காதுகள்..இதுதான் நம் வகுப்பறையை ரத்தினச் சுருக்கமாகச் சித்தரிக்கும் வர்ணனை.. ஆதர்ச வகுப்பறையின் அடையாளம்.கொஞ்சம் கவனித்துப் பார்த்தால்,கேட்கும் காதுகள் தனித்தியங்க, துறுதுறுக்கும் கைகளும், கால்களும் பல விஷயங்களை செய்து கொண்டிருக்கும். அண்டையில் சீட்டு பரிமாற்றம், சீண்டுதல், என பலப்பல செயல்கள். ஒன்றும் இல்லையெனில் ஜன்னலுக்கு வெளியே பார்வை. அதுவும் அனுமதிக்கப் படாதபோது உடல் மட்டும் வகுப்பறையில், உள்ளம் கனவுலகில். ஒரு சிறு புள்ளி விபரம்.: சுமார் 90% மாணவர்கள், வகுப்பு நேரங்களில் 1/3 பங்குக்கு குறைவான நேரமே.. தாங்கள் கவனிப்பதாய் தெரிவிக்கின்றனர்.
சார்..
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்,
அனுப்பினேன்.
"சார்"
உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.
நொடிகள் நகர,
உள்ளேயே ஈரம்.
வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்! .(.புகழேந்தி)
*எங்கும் அதிகார மணம் கமழும் வகுப்பறைதான்.. இன்றைய கல்வி முறை*.
இது உடைபட்டது.. அறிவொளிக் கல்வியில்தான். படிக்க வந்தோர் எங்களுக்கு
படிப்பித்தனர். கற்போம், கற்பிப்போம் என்ற வாசகத்தின் முழுமையும் உணர்ந்த காலம் அது.தமிழகத்தில் 10 மாவட்டங்களில் எழுத்தறிவு இயக்கம் 1990-95 களில் சாதனை படைத்தது.அதற்கு முக்கிய காரணம் அங்கு பணியாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர்களான, புதுக்கோட்டையில் திருமிகு ஷீலாராணி சுங்கத், சிவகங்கை. திருமிகு.குத்சியா காந்தி, விருதுநகர் திருமிகு. ஞானதேசிகன் போன்றோரே.அறிவொளி இயக்கத்தில் முக்கியமான விஷயம். 1. படிக்காதவர் மனத்தில் நாம் படிக்காதவராக இருப்பது என்ற உணர்வை உண்டுபண்ணுவது.2. படித்தவர்களின் மனத்தில், நம்மைச் சுற்றி இத்தனை பேர் கல்லாதவராக இருப்பது நமக்கு அவமானம். அவர்களை படிக்க வைக்க வேண்டிய சமூகக் கடமை நமக்கும் இருக்கிறது என்ற உணர்வைத் தூண்ட வைத்தல்.இது தழிழக எழுத்தறிவு இயக்கத்தில் நடந்தது. மக்கள் ஏராளமாய் படித்தனர். பின்னர் அரசியல் இதில் நுழைந்தது. காணாமல் போய்விட்டனர் புதிய கற்றோர். இன்றைய பள்ளிக்கல்வி வார்த்தையான அம்மா என்ற துவக்கத்தை விட, பட்டா, படி என்பது அவர்களுக்கு எழுதவும் புரிந்து கொள்ளவும் எளிதாய் இருந்தது.கோலம் போடும் கைகள், எளிதில் அ, ஆ வன்னா எழுதின. புத்தகம் கையில் எடுத்துவிடு, புத்தொரு ஆயுதம் ஆயிடும் உனக்கது, புத்தகம் கையில் எடுத்துவிடு என்பது நடைமுறைஆயிற்று. அனுபவ பங்கீடும் இவைகட்கு உதவி செய்தன.இப்படிப்பட்ட கல்வியைத்தான் எழுத்தறிவு தினம் வலியுறுத்துகிறது.

எழுத்தறிவு பற்றிய ஒரு பாடல்..
அறிவியல் இயக்க நண்பர்கள் உருவாக்கியது: 

புத்தகம் பேசுது, புத்தகம் பேசுது,
புத்தகம் பேசுது
கடந்த காலத்தை
நிகழ் காலத்தை
எதிர்காலத்தை..
ஒவ்வொரு நொடிப்பொழுதை..
புத்தகம் பேசுது... புத்தகம்)
உலகை மனிதரை,
இன்பத்தை துன்பத்தை
அழகிய மலரை அணுகுண்டை
வெற்றியை தோல்வியை
நேசத்தை நாசத்தை
புத்த்கம் பேசுது.. 3 முறை..
புத்தக்ம் பேசும் பேச்சுக்கள் யாவும்
காதினில் கேட்கலையா.. உன்
காதினில் கேட்கலையா?
புத்தகம் ஏதோ
சொல்ல தவிக்குது
உன்னிடம் வந்து
இருக்கத் தவிக்குது..
புத்தக்ம் உன்னை
மடியில் கிடத்தி
ராஜா ராணி
கதைகள் சொல்லும்.
E= MC2
E= MC2
புத்தகங்களில்
அறிவியலின் குரல்
ஓங்கி ஒலிக்கும்
ஞானம் சுரக்கும்.
புத்தகங்களில்
அடடா
எத்தனை பேருலகம்..
புத்தகம் ஏதோ சொல்லத் தவிக்குது..
 
 
* * எழுத்தறிவு என்பது சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கான திறவுகோல். இந்தியாவில் எழுத்தறிவு விகிதல் 2011, 74.04%. இதில் ஆண்கள்: 84.14%; பெண்கள்: 65.46%.ஆனால் இந்த எழுத்தறிவு நம்மை ஒடுக்கி நம் முதுகை வினாக்குறியாக மாற்றிய ஆங்கிலேயர் நம் நாட்டை நம்மிடம் ஒப்படைத்த போது 1947 ல் வெறும் 12% மட்டுமே இருந்தது இன்று அது 6 மடங்காக உயர்ந்திருக்கிறது.ஆனாலும்கூட, உலக எழுத்தறிவு தரத்திற்கு இணையாக மாறவில்லை. உலக எழுத்தறிவு 84%. இருப்பினு உலகில் அதிக எழுத்தறிவற்றவர்கள் வாழும் நாடு இந்தியாதான்.இந்த 74%மும் கூட எழுத்தறிவு இயக்கம் வந்த பின் தான் இந்த அளவுக்காவது எண்ணிக்கையின் விகிதம் உயர்ந்தது.
-மோகனா
-

No comments:

Post a Comment