முதல் பக்கம்

Sep 19, 2011

பள்ளி மாணவர்கள் பேரணி


First Published : 13 Aug 2011 11:39:01
போடி, ஆக. 12:÷போடியில், ஹிரோஷிமா-நாகசாகி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.÷தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போடி கிளை சார்பில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டால் ஏற்பட்ட பேரழிவை நினைவுகூரும் வகையில் பேரணி நடைபெற்றது. பேரணியை போடி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செலின் மேரி தொடங்கி வைத்தார்.÷போடி மூவேந்தர் நடுநிலைப் பள்ளி, சூலப்புரம் மற்றும் போ.அம்மாபட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 6,7,8 வகுப்புகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பேரணி வ.உ.சி. சிலை, தேவர் சிலை, பஸ் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலக சாலை வழியாக சென்றது. ÷பேரணியை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மரிய ஜோசப் நிறைவு செய்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க போடி கிளைப் பொருளாளர் கொ.ஜெகதீசன் மற்றும் கி.பரணிபாபு ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலாளர் சுந்தர் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். ÷கிளைச் செயலாளர் ப.ஸ்ரீதர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment