முதல் பக்கம்

Sep 19, 2011

தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு-2011 தென்மண்டல பயிற்சி முகாம்,ஆண்டிபட்டி


தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 6வது தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டிற்கான தென்மண்டல பயிற்சிமுகாம் செப்டம்பர்,18,2011 அன்று ஆண்டிபட்டி எஸ்.கே.எ.பள்ளியில் ஆண்டிபட்டி கிளையின் ஒருங்கிணைப்பில் ஒருநாள் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி கிளையின் தலைவர் எஸ்.மாதவன் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் வரவேற்றுப்பேசினார். ஆசிரியர் இணையத்திற்கான தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் ஆசிரியர் அறிவியல் மாநாட்டின் நோக்கம், ஆசிரியர் இணையம் அமைக்கவேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்த அறிமுகவுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலக் கருத்தாளர் முனைவர்.எஸ்.தினகரன் மாநாட்டின் மையக்கருத்து, கற்றல் கற்பித்தலின் நுணுக்கங்கள், வகுப்பறைகளில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவான கருத்துரையாற்றினார்.கல்வியாளர்.திரு.மொ.பாண்டியராஜன் ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டிய சில முன்மாதிரி ஆய்வுகள் குறித்துப் பேசினார். நெல்லை மாவட்டச்செயலாளர்  திரு.கணபதி அறிவியல் கல்வியும் ஆசிரியர்களும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் திரு.மு.தியாகராஜன் நிறைவுரையாற்றினார். ஆண்டிபட்டி கிளைச்செயலாளர் ஆர்.அம்மையப்பன் நன்றிகூறினார். இராமநாதபுரம்,திருநெல்வேலி,விருதுநகர்,மதுரை,தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த முப்பது நண்பர்கள் கலந்துகொண்டனர். மதுரையில் செப்டம்பர் 21ந் தேதியும், திருநெல்வேலியில் அக்டோபர் 9ந் தேதியும் ஆசிரியர் இணையக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

No comments:

Post a Comment