முதல் பக்கம்

Sep 24, 2011

ஹிரோசிமா-நாகசாகி நினைவு தின போட்டி

தினமலர் – 2011 ஆக. 6

கம்பம்:அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹிரோசிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை அறிவித்துள்ளது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுந்தர் கூறியிருப்பதாவது : ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா-நாகசாகி நகரங்கள் மீது நடந்த அணுகுண்டு தாக்குதலில் லட்சக்கணக்கில் மக்கள் பலியானார்கள். அதுபோன்ற நிகழ்வு மீண்டும் வராமல் இருக்க, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "அறிவியல் அமைதிக்கே' என்ற முழக்கத்தை வெளியிட்டுள்ளது. அதை நினைவு கூறும் வகையில்,மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. "போரின்
பிடியில் பிஞ்சுகள்' என்ற தலைப்பில், 6,7,8 வகுப்புகளுக்கு ஓவியப்போட்டியும், 9 முதல் 12 ம் வகுப்பு வரை "இதுபோல் துயரம் இனிமேல் வேண்டாம்' என்ற தலைப்பில் 5 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை போட்டியும், கல்லூரி மாணவர்களுக்கு "அன்னை பூமியில் அமைதி தவழட்டும்' என்ற தலைப்பில்
கவிதை போட்டி (25 வரிகளுக்கு மிகாமல்), ஆசிரியர்களுக்கு "அணு ஆயுதப்
போட்டியும் மானுடத்தின் தலைகுனிவும்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் (5 பக்கங்களுக்கு மிகாமல்) நடத்தப்படுகிறது. படைப்புகளை ஆகஸ்ட் 19க்குள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குட்டியாபிள்ளை தெரு, கம்பம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment