முதல் பக்கம்

Sep 16, 2011

ஹிரோஷிமா தினக் கருத்தரங்கம் & பாராட்டு விழா

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,கம்பம் கிளையின் சார்பாக ஆகஸ்ட்,7,2011 அன்று காலை கூடலூர் வீகேன் பயிற்சி மையத்தில் ஹிரோஷிமா தினக் கருத்தரங்கம் மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுவிழா நடைபெற்றது. கிளைத்தலைவர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். திரு.கருப்புச்சட்டை நடராஜன் முன்னிலை வகித்தார். கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் துவக்கவுரையாற்றினார். மாவட்டக்கருத்தாளர்கள் திரு.செல்வன் திரு.ராஜசேகரன் திரு.வெங்கட்ராமன் ஆகியோர் போரும் அமைதியும்,நல்லதோர் வீணை செய்தே, ஐன்ஸ்டீன் வடித்த கண்ணீர் என பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இன்பசேகரன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து பனை,பூ,ஏரி ஆகிய காட்சிக்கவிதைகள் மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் நிறைவுரையாற்றினார். கிளைப் பொருளாளர் ஓவியாதனசேகரன் நன்றி கூறினார். அறிவியல் இயக்கத் தொண்டர்கள் ராஜ்குமார், பாஸ்கர் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 40 மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment