முதல் பக்கம்

Sep 16, 2011

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2011 வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்,தேனி

தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் அன்னஞ்சி,அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் இன்று(10.09.2009) பிற்பகல் நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பா.செந்தில் குமரன் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோவன்,மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சேசுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தே.சுந்தர் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் துவக்கிவைத்துப் பேசினார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல்துறைப் பேராசிரியர் எஸ்.கண்ணன்,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் முனைவர்.ஜி.செல்வராஜ் ஆகியோர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மையத்தலைப்பு, துணைத்தலைப்புகள், ஆய்வு முறை, சமர்ப்பிக்கும் முறை,குழுச்செயல்பாட்டின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விதங்களில் கருத்துரைகளை வழங்கினர். மாவட்டப்பொருளாளர் செ.சிவாஜி நன்றி கூறினார்.

பத்து பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள்,மாணவர்கள் உட்பட 40பேர் கலந்து கொண்டனர்.ஆர்வமுள்ள பள்ளிகள் ஆய்வுத்தலைப்புக்களை தேர்வு செய்து மாநாட்டிற்கான பதிவுப்படிவத்தை வருகின்ற செப்டம்பர் 15க்குள் தே.சுந்தர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, 203/1,நாராயணத்தேவன்பட்டி-625521 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 9488011128.

No comments:

Post a Comment