முதல் பக்கம்

Sep 16, 2011

புகைப்படக் கண்காட்சி & கருத்தரங்கம்

சர்வதேச வனவள ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி கிளையின் சார்பில் வனம் அறக்கட்டளையோடு இணைந்து செப்டம்பர் 3,2011 அன்று பிற்பகல் அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டப்பொருளாளர் செ.சிவாஜி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சேசுராஜ் முன்னிலை வகித்தார். தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட வன அலுவலர் திரு.கணேசன் கண்காட்சியைத் துவங்கிவைத்துப் பேசினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல்துறைப் பேராசிரியர் முனைவர்.எஸ்.கண்ணன், வனம் அறக்கட்டளையின் தலைவர் திரு.சி.பி.ராஜ்குமார்,வனம் கருத்தாளர் திரு.எஸ்.ராம்குமார் ஆகியோர் காடுகள் உலகின் கருப்பை,மரங்கள் தரும் வரங்கள் ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி கிளைப் பொருளாளர் அ.சதீஸ் நன்றி கூறினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன்,கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மோகன்குமாரமங்கலம் உள்ளிட்ட அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்களும் மாணவர்களும் திரளாகப் பங்கேற்றனர்.வன உயிரினங்கள் பற்றிய அரிய புகைப்படங்களின் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டுச் சென்றனர்.

No comments:

Post a Comment