முதல் பக்கம்

Sep 19, 2011

அறிவியல் இயக்க கருத்தரங்கு

First Published : 15 Aug 2011 10:23:00 AM IST
  தேனி, ஆக. 14: தேனி அல்லிநகரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை சார்பில் ஹிரோஷிமா, நாகசாகி நினைவு தின கருத்தரங்கு நடைபெற்றது.தேனி வட்டாரத் தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜ் முன்னிலை வகித்தார். கிளை செயலர் தெய்வேந்திரன் வரவேற்றார்.மாவட்டத் தலைவர் செந்தில்குமரன், செயலர் சுந்தர், எழுத்தாளர் காமுத்துரை, பேராசிரியர் மோகனா ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொதுக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீராமன், சிவாஜி, வட்டார பொருளாளர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி, ஊஞ்சாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட அனு ஆயுத எதிர்ப்பு ஊர்வலத்தை, தேனி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமணி தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment