முதல் பக்கம்

Sep 24, 2011

அறிவியல் திருவிழா

பதிவு செய்த நாள் : மே 23,2011,22:16 IST
 
கூடலூர் : சர்வதேச பல்லுயிர்மை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கோடை அறிவியல் திருவிழா கூடலூர் என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 2011ம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாகவும், வன ஆண்டாகவும் ஐ.நா., சபை அறிவித்திருப்பதால், வேதியியலையும், வன வளத்தையும் மையக் கருத்தாக வைத்து விழா நடந்தன. ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமையில், தலைமை ஆசிரியர் கதிரேசன் முன்னிலையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் வரவேற்றார். மாணவர்களுக்கு எளிய வேதியியல் பரிசோதனைகள் செய்து காட்டப்பட்டது. அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர், தமிழாசிரியர் பிரகலாதன், துளிர் அறிவியல் மைய இயக்குனர் தியாகராஜன், செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், ஆசிரியர்கள் சின்னச்சாமி, பிரகாஷ், சீனிவாசன் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment