முதல் பக்கம்

Feb 17, 2012

நாட்டுநலப்பணித்திட்டமுகாமில் கருத்தரங்கம்


இன்று-பிப்ரவரி,17,2012- சுருளிப்பட்டி தெற்கு சமுதாயக்கூடத்தில் உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் முனைவர். மு.முகமது ஷெரீப் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.சிவாஜி கருத்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் அறிவியல் பாடத்திற்கும் அறிவியல் மனப்பான்மைக்கும் இடையிலான வேறுபாட்டை செயல்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். திட்ட அலுவலர் எஸ்.முகமது ராவுத்தர் நன்றி கூறினார். கல்லூரி மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்..--

SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

No comments:

Post a Comment