முதல் பக்கம்

Feb 27, 2012

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பெரியகுளத்தில் திறனறிதல் போட்டி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பெரியகுளம் கிளையின் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி,25,2012-சனிக்கிழமையன்று பெரியகுளம் வி.எம்.நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திறனறிதல் போட்டி நடைபெற்றது. ஒன்றியம் முழுவதுமிருந்து 44 நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 6,7,8 வகுப்பு மாணவர்கள் 1160 பேரும் ஆசிரியர்கள் 88 பேரும் கலந்துகொண்டனர். தேர்வு இரண்டு மணிநேரம் நடைபெற்றது. அந்தந்த வகுப்பிற்குரிய அறிவியல் பாடங்களிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தகக்  கண்காட்சி மற்றும் அன்றாட வாழ்வில் வேதியியல் குறித்த போஸ்டர் கண்காட்சியும் நடைபெற்றது. பெரியகுளம் கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியன். கிளைச் செயலாளர் எஸ்.இராம்சங்கர், கிளைப்பொருளாளர் பெ.ஆண்டவர் மற்றும் கிளைப் பொறுப்பாளர்கள் எஸ்.எ.செல்வராஜ், வி.ரமேஷ், கார்த்திகேயன் மற்றும் சிவா ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.சேசுராஜ், வி.வெங்கட்ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.மனோகரன், முத்துமணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment