முதல் பக்கம்

Feb 14, 2012

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரை, கவிதை போட்டிகள்


தினகரன்: கூடலூர்: பிப்ரவரி,11

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கட்டுரை, கவிதை போட்டிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடையேயும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. வரும் பிப்ரவரி,28ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு எங்கும் ஆற்றல் எதிலும் ஆற்றல் என்ற தலைப்பில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, மனித வாழ்வின் மாற்றத்திற்கு ஆற்றலின் பங்கு என்ற தலைப்பில் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு 5 பக்க அளவில் கட்டுரை, ஆற்றலை அறிவோம் ஆற்றலால் உயர்வோம் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கவிதைப்போட்டி என பல்வேறு வகையான போட்டிகளை தேனி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் தங்கள் படைப்புகளை பிப்ரவரி,18ஆம் தேதிக்குள் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குட்டியாபிள்ளை தெரு, கம்பம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment