முதல் பக்கம்

Nov 3, 2010

அன்றொரு நாள்_1

எனது
நண்பர் ஒருவர்
திண்டுக்கல் மாவட்டத்தில்
ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
பொத்தாம்பொதுவான
ஆசிரியர்களைப்போல
அல்லாமல்
ஓரளவு அர்ப்பணிப்பு
உணர்வும் நிறைய திறமையும் உள்ளவர்.
ஆனாலும் அவர் ஒரு
தேர்ந்த சந்தர்ப்பவாதி.
இதை அடிக்கடி அவரிடமும் சொல்வதுண்டு.
இருவரும் இருவேறு துருவங்கள்.
இருந்தபோதும் பத்து ஆண்டுகால நெருங்கிய நண்பர்கள்.

அவர் சொன்ன
ஒரு நிகழ்வு வினோதமானது.

நண்பர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில்
மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்காகச்
சென்றிருக்கிறார்.

ஒருவீட்டில்
இவருடைய பள்ளி
மாணவரின் பெற்றோர்.

அந்த அம்மா
அப்பாவியாகக் கேட்டிருக்கிறார்.
'ஏம்ப்பா தம்பி,
ஒங்க பள்ளிக்கூடத்துல
............ங்கிற வாத்தியார் யாருப்பா?'

என்னம்மா என்ன விஷயம்?

'அந்த ஆளுனால எங்கவீட்டு கன்னுக்குட்டி
அடிவாங்கிச் சாகுதப்பா..'

என்னவாம்?

அந்த வாத்தியார்
தெனமும் எம்மகன அடிக்கிறாராம்.
அவருமேல இருக்கிற
கோபத்துல
கன்னுக்குட்டிக்கு
அவருபேர வச்சு
போகையிலும் வரையிலும் பேரச் சொல்லிச்சொல்லி
அடிக்கிறான் தம்பி!'

பதில்சொல்லாமல்
பல்லிளித்துவிட்டுத் திரும்பினார் நம் நண்பர்.
காரணம்?
நம்மாளுதான் அவர்கள் தேடும் அந்த ஆசிரியர்.

ஆசிரியர்களின் பிரம்படி
எங்குபோய் பிரதிபலிக்கிறது
பார்த்தீர்களா?

மாணவர்களின்
இடம்மாறும் கோபத்திற்கு
இன்னும் எத்தனை
ஆடுமாடுகள் ஆளாகிக்கொண்டிருக்கின்றனவோ?
_சுதேசு

No comments:

Post a Comment