முதல் பக்கம்

Nov 21, 2010

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தினமலர்
உத்தமபாளையம்,நவ.20

தமிழ்நாடு அறிவியல்
இயக்கம் சார்பில்
மாவட்ட அளவிலான
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
உத்தமபாளையம்
கருத்தராவுத்தர் கல்லூரியில் நடந்தது.

மாவட்டத்தலைவர்
செந்தில் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சுந்தர் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர்(பொ)
அமானுல்லா மாநாட்டை துவக்கி வைத்தார்.
குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சுந்தர் அறிமுக உரையாற்றினார்.

மாவட்டம் முழுவதிலிருந்தும்
ஏராளமான மாணவர்கள்
60 குழுக்களாக பல்வேறு
தலைப்புகளில்
ஆய்வுகளை சமர்ப்பித்தனர்.
ஆறு குழுக்கள் மாநில
மாநாட்டிற்கு தேர்வு
செய்யப்பட்டன.

தேர்வான குழுக்களுக்கு
ஆர்.டி.ஓ., ராஜேந்திரன்
சான்றிதழ்கள் வழங்கினார்.
மருத்துவ துறையில்
நானோ தொழில் நுட்பம்
என்ற தலைப்பில் விஞ்ஞானிகள் சந்திப்பு
நடந்தது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் விஞ்ஞானி
முருகபூபதி கருத்துரை
வழங்கினார்.
ஆய்வு ஒருங்கிணைப்பாளர்
கண்ணன் தேர்வான ஆய்வு முடிவுகளை
அறிவித்தார்.
நிறைவு விழா
மாவட்ட துணைத்தலைவர்
செல்வராஜ் தலைமையில்
நடந்தது.

துளிர் அறிவியல் மைய
இயக்குனர் தியாகராஜன்,
இணைச்செயலாளர் ராஜமாணிக்கம் பேசினர்.
மாவட்ட செயற்குழு
உறுப்பினர் முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment