முதல் பக்கம்

Nov 14, 2010

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தினமணி
கம்பம், நவ. 13

உத்தமபாளையம்ஹாஜி கருத்தராவுத்தர் ஹெளதியா கல்லூரியில்தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 18-வது தேசிய குழந்தைகள் அறிவியல்மாவட்ட மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்மாவட்ட தலைவர் பா.செந்தில்குமார் தலைமை வகித்தார்.கௌரவத் தலைவர் பேராசிரியர் எஸ்.எம்.சௌகத்அலிமுன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் தே.சுந்தர் வரவேற்புரையாற்றினார்.கருத்தராவுத்தர் கல்லூரியின்முதல்வர் எம்.ஹெளதுமுகைதீன் தொடக்க உரையாற்றினார்.அரசு மருத்துவமனை மருத்துவர் பி.அழகர்சாமி, ஸ்டேட் வங்கி மேலாளர் எ.பரமசிவம்,பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத் தலைவர் டி.கே.சீனிவாசன்ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் மெட்ரிக்.பள்ளிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள்,தங்களது ஆய்வு கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.சிறந்த ஆய்வு கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும்நடுவர்களாக பேராசிரியர்கள் எஸ்.அமானுல்லா,எஸ்.ராமநாதன், கே.ஜெயபாலன், சார்லஸ் ராபர்ட்,பி.பொற்கொடி, ஜெ.கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் செயல்பட்டனர்.
ஒருங்கிணைப்பாளராக பேராசரியர் எஸ்.கண்ணன் செயல்பட்டார்.
தேனி கம்மவார் மெட்ரிக். பள்ளி,மேரிமாதா பள்ளி, கம்பம் முத்துவிநாயகர் பள்ளி,கூடலூர் துளிர் பள்ளி மாணவர்களின்ஆய்வுக் கட்டுரைகள், சிறந்தவையாகத்தேர்வு செய்யப்பட்டன. இவர்கள் மாநில அளவில்நடைபெறும் தேசிய குழந்தை அறிவியல்மாநாட்டில் கலந்து கொள்வார்கள்என்று மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் கே.பார்வதி, மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

No comments:

Post a Comment