முதல் பக்கம்

Nov 21, 2010

அறிவியல் திறனறிதல் போட்டி

தினகரன்
கம்பம்_நவம்பர்,19

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக கம்பம்
நகரில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு
2010ம் ஆண்டிற்கான திறனறிதல் போட்டி
அரசு பெண்கள்
மேல்நிலைப் பள்ளியில்
நடந்தது.
6முதல் 8ம் வகுப்பு வரை
உள்ள மாணவ மாணவிகள்
இளநிலை என்றும்
9 முதல் 12ம் வகுப்பு வரை
உள்ள மாணவ மாணவிகள் மேல்நிலை என்றும் இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.

கூடலூர் மழலையர்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
வ.உ.சி.நடுநிலைப்பள்ளி,
விக்ரம் சாராபாய் துளிர் இல்லம்,
காமயகவுண்டன்பட்டி
கஸ்தூரிபாய் பெண்கள்
மேல்நிலைப்பள்ளி,
உத்தமபாளையம்
பாத்துமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
கம்பம் முத்தையாபிள்ளை
உயர்நிலைப்பள்ளி.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய
பள்ளிகளில் இருந்து
150க்கும் மேற்பட்ட
மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
எழுத்து தேர்வில்
120 நிமிடத்தில் 100 கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் 75 சதவீத
மதிப்பெண் பெறும்
அனைவரும் அறிவியல்
சுற்றுலாவில் பங்கேற்கும் வாய்ப்பு
அளிக்கப்பட உள்ளது.
இப்போட்டியில்
அறிவியல் இயக்க
ஆர்வலர்கள் முத்துக்கண்ணன்,
வெங்கட்ராமன்,
அறிவழகன்,
ஈஸ்வரன்,அருண்பிரசன்னா,
முத்துலட்சுமி ஆகியோர்
மேற்பார்வையாளர்களாக
பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர் செய்திருந்தார்.

No comments:

Post a Comment