முதல் பக்கம்

Nov 19, 2010

அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டி

 தினமணி
 கம்பம், நவ. 18:÷
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
சார்பில் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் 
திறனறிதல் போட்டி,
கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
திங்கள்கிழமை நடைபெற்றது.÷
இப் போட்டியில்
கூடலூர் மழலையர் மெட்ரிக். பள்ளி, 
வ.உ.சி நடுநிலைப் பள்ளி, 
விக்ரம் சாரா பாய் துளிர் இல்லம், 
காமயகவுண்டன்பட்டி
கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
உத்தமபாளையம் பாத்துமா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, 
கம்பம் முத்தையா பிள்ளை உயர்நிலைப் பள்ளி
மற்றும் 
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச்
சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.÷
மாவட்ட செயலாளர் தே. சுந்தர் கூறியதாவது:÷
துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் 
தேர்வைக் கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.
தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களைப் 
பெற்ற மாணவர்களுக்கு 
அறிவியல் சுற்றுலாவில் 
கலந்து கொள்ள வாய்ப்பு அளிப்பதுடன்,
மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில்
பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.÷
போட்டிக்கான ஏற்பாடுகளை
மாவட்ட செயலாளர் தே. சுந்தர் தலைமையில் 
அறிவியல் ஆர்வலர்கள் க.முத்துக்கண்ணன், 
வி.வெங்கட்ராமன், ஆர்.அறிவழகன், 
முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment