முதல் பக்கம்

Nov 29, 2010

இளைஞர் அறிவியல் மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் நடைபெறுகிறது .மாணவ ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்ளலாம்

தினத்தந்தி
கம்பம்,நவம்பர் 29

இளைஞர் அறிவியல்
மாநாடு_2010-2011
அடுத்த ஆண்டு பிப்ரவரி
மாதம் 28_ந் தேதி மதுரையில்
நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில்
ஆராய்ச்சியாளர்களாக
உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம்
என்று
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தெரிவித்துள்ளது.

இளைஞர் அறிவியல் மாநாடு
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
ஒருங்கிணைப்பில்
2-வது இளைஞர் அறிவியல் மாநாடு
அடுத்த ஆண்டு(2011) பிப்ரவரி
மாதம் 28_ந் தேதி மதுரையில்
நடைபெறுகிறது.

இளைஞர்களின் படைப்பாற்றல்
மற்றும் திறமைகளை
வெளிக்கொண்டு வரும்
நோக்கத்தில் இந்த மாநாடு
நடத்தப்படுகிறது.

சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு
அறிவியல் அடிப்படையிலான
தீர்வுகளை முன்வைக்கும்
இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது,
பிரச்சினைகளை அறிவியல் பார்வையுடன்
உற்றுநோக்கச் செய்வது,
களச்செயல்பாடு, ஆய்வு
,சோதனைகளின் அடிப்படையில்
நடைமுறை சாத்தியமான
புதிய மாற்றுக்களை உருவாக்குவது
போன்றவையும் மாநாட்டு நோக்கமாக உள்ளது.

ஆய்வுத்தலைப்பு
இயற்கை,அறிவியல் மற்றும் சமூகம்,
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவுகள்,
மக்கள் வாழ்வும் மூடநம்பிக்கைகளும்-
அதன் தீர்வுகளும் ,அறிவியலைப் பரப்புதல்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
பெண்கள் மேம்பாடு,
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்,
ஊரக மேம்பாடு,
நகரமயமாதல், தொழில்மயமாதல்
ஆகியவைகள் துணை தலைப்புகளாக
அறிவிக்கப் பட்டு உள்ளது.

இந்த மாநாட்டில்
17 வயது முதல் 30 வயது வரையிலான
கலை,அறிவியல்,பொறியியல்,
தொழிற்கல்வி, மருத்துவம் உள்ளிட்ட
அனைத்துத்துறை மாணவர்களும்
கலந்துகொள்ளலாம்.
உயர்கல்வி தொடர முடியாத
ஆர்வமுள்ள இளைஞர்களும்
இதில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

ஒவ்வொரு ஆய்வும்
2 முதல் 4 மாணவர்கள் -இளைஞர்கள்
குழுவாக இணைந்து மேற்கொள்ள வேண்டும்
. பேராசிரியர்,ஆசிரியர் அல்லது
அறிவியல் ஆர்வலர் ஒருவரை
வழிகாட்டியாகக் கொண்டிருக்கவேண்டும்.

ஆய்வுகள் புதியதாக, எளிமையாக,
நடைமுறைக்கு உகந்ததாகவும்
அன்றாட வாழ்வியல் நடைமுறை சார்ந்ததாகவும்
அறிவியல் அணுகுமுறைகளோடு
தொடர்செயல்பாடுகளைக் கொண்டதாகவும்
ஆய்வுகள் இருக்கவேண்டும்.

மாநில விருது:
ஒவ்வொரு துறையிலிருந்தும்
50 ஆய்வுகள் மாநில மாநாட்டிற்கு
தேர்வு செய்யப்படும்.
அதிலிருந்து துறைவாரியாக
10 ஆய்வுகள் மாநில விருதிற்கு
தேர்வு செய்யப்படும்.
பங்கேற்கும் அனைவருக்கும்
சான்றிதழ் வழங்கப்படும்.
சிறந்த ஆய்வுகளின் தொகுப்பு
புத்தகமாக மாநில மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது.
ஆய்வு சுருக்கங்களை
அடுத்த மாதம்(டிசம்பர்) 24ந் தேதிக்குள்
அனுப்பவேண்டும்.
முழுமையான ஆய்வு சுருக்கங்களை
அடுத்த ஆண்டு (2011)
ஜனவரி மாதம் 12ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு
தே.சுந்தர், மாவட்டச்செயலாளர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
அரசினர் கள்ளர் நடுநிலைப்பள்ளி,
சுருளிப்பட்டி, தேனிமாவட்டம்
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இளைஞர் அறிவியல்
மாநாட்டில் கம்பம் ஆதிசுஞ்சனகிரி
மகளிர் கல்லூரி மாணவி மேற்கொண்ட ஆய்வு
மாநிலத்தில் முதலிடம்
பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment