முதல் பக்கம்

Nov 14, 2010

18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2010

2010 நவம்பர் 12,வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உத்தமபாளையம் HKRH கல்லூரியில் 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தேனி மாவட்ட அளவில் நடைபெற்றது.


துவக்க விழா:
துவக்க விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் திருமிகு.பா.செந்தில் குமரன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் திருமிகு.தே.சுந்தர் வரவேற்றுப் பேசினார்.
ஆய்வறிக்கை சமர்ப்பித்தல்:

அரசு,தனியார்,மெட்ரிக் பள்ளி மாணவர்களும், குழந்தைத்தொழிலாளர் சிறப்புப்பள்ளி, எஸ்.எஸ்.எ. இணைப்புப்பள்ளி மற்றும் துளிர் இல்லங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் தமிழ்_இளையோர், மூத்தோர் ஆங்கிலம்_இளையோர், மூத்தோர் என நான்கு பிரிவுகளில் 48 ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர். பேரா.எஸ்.இராமநாதன், பேரா.கே.ஜெயபாலன்,தேனி வேளாண் அலுவலர் திருமிகு. என்.ராஜ்மனோகரன், சின்னமனூர் வேளாண் உதவி இயக்குநர் திருமிகு.எச்.சையது முகமது நஹீப், முனைவர்.மு.முகமது செரீப், பேரா.டி.கே.திருமலைச்சாமி, பேரா.ஆர்.பாண்டி,பேரா.எம்.சார்லஸ் ராபர்ட், முனைவர்.சி.கோபி, முனைவர்.எம்.அப்துல் காதர் ஜெய்லானி, பேரா.பி.பொற்கொடி, பேரா.ஜெ.கிருஷ்ணவேணி, பேரா.ஜெ.சுரேகா, திருமிகு.எம்.அழகு, திருமிகு.பி.ஐயப்பன், திருமிகு.எம்.மணிகண்டன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பயிற்சுழற்சி செய்த மற்றும் ஒரே மாதிரியாக பயிரிடப்படும் மண்ணின் சத்துப்பொருட்கள் பற்றிய ஆய்வு, தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளியின் இயற்கை மற்றும் செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படும் மண் பற்றிய ஒப்பீடு, தேனி கம்மவார் சங்க மெட்ரிக் பள்ளியின் மண்ணை வளப்படுத்தும் கரையான்கள் பற்றிய ஆய்வு,கோம்பை, எஸ்.கே.பி. பள்ளியின் நிலவளம் பாதுகாப்பில் வெட்டிவேரின் பங்கு பற்றிய ஆய்வு,_கம்பம், முக்தி விநாயகா நடுநிலைப் பள்ளியின் மண்வகை ஒப்பீடு,_கூடலூர், விக்ரம்சாராபாய் துளிர் இல்லத்தின்  சிறு,குறு விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றிய ஆய்வு  ஆகியவற்றை மாநில அளவிலான மாநாட்டிற்குத் தேர்வு செய்தனர்.

பாராட்டு விழா:
மாவட்டச்செயலாளர் திருமிகு.தே.சுந்தர் அறிவியல் இயக்கம் பற்றிய அறிமுக உரையாற்றினார். மாநில மாநாட்டிற்குத் தேர்வான ஆய்வுகளை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.எஸ்.கண்ணன் அறிவித்தார். தேர்வான குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்கி திருமிகு.கே.ராஜேந்திரன், வருவாய்க் கோட்டாட்சியர் சிறப்புரையாற்றினார். முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருமிகு.சிவாஜி மாவட்டக்கல்வி அலுவலர் திருமிகு.கே.பார்வதி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர்(பொ) பரமசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நடுவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

விஞ்ஞானிகள் சந்திப்பு:
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் இணைச்செயலாளர் பேரா.பொ.ராஜமாணிக்கம் இந்நிகழ்வைத் துவக்கி வைத்துப்பேசினார். "மருத்துவத்துறையில் நானோ தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் விஞ்ஞானி.கே.முருக பூபதிராஜா கருத்துரை வழங்கினார்.

நிறைவு விழா:
 
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்துணைத் தலைவர் முனைவர்.ஜி.செல்வராஜ் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர்(பொ) முனைவர். எஸ்.அமானுல்லா வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் தொண்டர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கி நிறைவுரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.மு.தியாகராஜன் மாநாட்டு மதிப்புரையாற்றினார். அறிவியல் வெளியீடுகள் புத்தகக் கண்காட்சியை திருமிகு.மொ.தனசேகரன் நடத்தினார். மாநாடு சிறக்க பலவகைகளில் உதவிபுரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் திருமிகு.க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.

1 comment:

  1. well conducted congress.Mobilisation of the evaluators from colleges and adminstrators like RDO, DEO, etc.,from depts. show that TNSF at Theni is picking up. Thanks also to HKRH college management and staff

    ReplyDelete