முதல் பக்கம்

Nov 7, 2010

அன்றொருநாள்_2

பணியேற்ற முதல்நாள்.

நான் பணியேற்கும் போது
மிகவும் குறைந்த வயது.
19 வயதுகூட முழுமையாக முடியவில்லை.

எட்டாம் வகுப்பைக்கடந்து தான்
தலைமை ஆசிரியர் அறை.
வாட்டசாட்டமாக
நல்ல
முரட்டு முரட்டுப்பயலுக
எட்டாம் வகுப்பிற்குள்.
பார்த்தவுடன்
வியர்த்துப்போனது எனக்கு.
சொல்லப்போனால்
ஒரு மணப்பெண்ணுக்கு
தோன்றும் புகுந்தவீட்டு அச்சங்கள் போல
அடுத்தடுத்து அத்தனை கேள்விகள்!

தலைமை ஆசிரியர் என்ன டைப்போ?
மற்ற வாத்தியாரெல்லாம்
டிப்டாப்'பாக இருக்கிறார்களே
நம்மோடு சகஜமாகப் பழகுவார்களா?
இந்த
முரட்டுப்பயலுக
நம்மை மதிப்பார்களா?
சொல்வதைக் கேட்பார்களா?
சின்னப்பையனாக
இருக்கிறேன் என்பதால்
கிண்டல் செய்வார்களா?

இப்படி
பல கேள்விகள்
மனதிற்குள் இடமின்றி
முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன.
இதுதெரியாமல்
ஆளாளுக்கு
புத்திமதிகள்,
ஆலோசனைகள்.

ஒருவழியாக
எல்லாம் முடிந்து
எனக்கொரு வகுப்பை ஒதுக்கினார்கள்.
மூன்றாம் வகுப்பு..

உள்ளே நுழைகிறேன்...
வகுப்பறையில் கலகலப்பான சிரிப்போடும்
மலர்ந்த முகத்தோடும்
குழந்தைகள்!
நடுக்கத்தோடு நான்.!

தலைமை ஆசிரியர் என்கூடவே வந்து குழந்தைகளிடம் சொல்லி....விட்டுச்சென்றதோடு சரி.

நான் நானாக
ஒரு
சம்பிரதாயமான
அறிமுகம் கூட
செய்துகொள்ளவில்லை.

கடமையே
கண்ணாக..
'தமிழ் புத்தகத்தை எடுங்க..
முதல் பாடத்தை (உண்மையைச் சொன்னால் அது பாடமில்லை.. நல்ல பாட்டு) எடுங்க..
நான் சொல்லச்சொல்ல திருப்பிச் சொல்லுங்க..'

'வனத்திலேஒருவிழா..'

அக்னி டிஎம்டி கம்பிகள்போல
உறுதியாக எந்த
வளைவு நெளிவும்
இல்லாமல் ஒரு வரியைச்சொன்னேன்..

ஒரு ரியாக்சனும் இல்லை.
அடுத்து கைகளை லேசாக ஆட்டி
அந்த வரியை ஓரிடத்தில் ஒடித்து இரண்டாகச் சொன்னேன்..

வனத்திலே...
ஒருவிழா...

அத்தனை குழந்தைகளும்
ஆக்டிவேட் ஆயினர்.'

பல ஆண்டுகள் கடந்துவிட்டன.
இன்னும்
குழந்தைகளை
முழுமையாக
ஆக்டிவேட் செய்வதற்கான
பாஸ்வேர்டுகளைத்
தேடிக்கொண்டே
இருக்கிறேன்.

காலம்தான் பதில்சொல்ல வேண்டும்...

என்னிடம்
சிக்கி
அந்தக் குழந்தைகள்
சின்னாபின்னமாகிப்
போகிறார்களா?
இல்லை
அவர்களிடம் சிக்கிச்சிக்கி
இந்தச் சிடுமூஞ்சி
சிற்பமாகப் போகிறதோ?
என்று!
_சுதேசு

No comments:

Post a Comment